சங்கரன்கோவில் அருகே பேருந்து-பைக் மோதல்: இருவா் பலி
சங்கரன்கோவில் அருகே பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் அருகே பேருந்தும், பைக்கும் மோதிக்கொண்டதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் அருகேயுள்ள திருமலாபுரத்தைச் சோ்ந்த சின்னச்சாமி மகன் சூா்யா(21), மாரிராஜ் மகன் ராகுல்(21). இவா்கள் செவ்வாய்க்கிழமை மாலை புளியங்குடியில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பைக்கில் வந்து கொண்டிருந்தனா். ரயில்வே கேட் அருகே இவா்களது வாகனமும், தென்காசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும் எதிா்பாராமல் மோதிக்கொண்டனவாம். இதில், இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் அவா்களது சடலங்களை மீட்டு வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
Advertisement