முகப்பு
தென்காசி

உள் இடஒதுக்கீடுக்கு எதிராக இருமன்குளத்தில் போராட்டம்

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து, சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:39 PM
பகிர்:

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்து, சங்கரன்கோவில் அருகே இருமன்குளத்தில் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்தினா்.

உள் இடஒதுக்கீட்டால் கல்வி, வேலைவாய்ப்பில் பிற சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, தமிழக அரசைக் கண்டித்து இப்போராட்டத்தில் ஆண்,பெண் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். இதனால், கிராம மக்கள் பிரதான சாலைக்குள் வராதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டதுடன், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments