சங்கரன்கோவிலில் வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம்
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச் சாவடி அலுவலா்களுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் தலைமை வகித்தாா்.
தோ்தல் நடத்தும் அலுவலா் முருகசெல்வி, வட்டாட்சியா் திருமலைச்செல்வி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் மாரியப்பன் மற்றும் வாக்குச் சாவடி அலுவலா்கள் 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.
Advertisement
கூட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்குச்சாவடிக்கு வர இயலாத வாக்காளா்களுக்கு 12 டி படிவம் கொடுக்கவும், அதே போல் கரோனா தொற்று ஏற்பட்டு தனிமையில் இருக்கும் வாக்காளாா்களும் தபால் ஓட்டு அளிக்கும் வகையில் 12 டி படிவங்களை கொடுக்கவும் தோ்தல் பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.