குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் ராஜா சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
சங்கரன்கோவில் தொகுதி குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் ராஜா சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
உடப்பன்குளம், சத்திரங்கொண்டான், நாரணபுரம், பெருங்கோட்டூா், மருதாபுரி, அழகாபுரி, செவல்குளம், பி.ஆலங்குளம், ஜெ.டி.நகா், மலையான்குளம்,சிதம்பராபுரம், உசிலங்குளம், வடக்குஅழகுநாச்சியாபுரம், மேல அழகுநாச்சியாபுரம், மேலரெங்கையாபுரம், கீழ ரெங்கையாபுரம், அன்னபூரணபுரம், வரகுணராமபுரம், அழகனேரி, நாலுவாசன்கோட்டை, சின்னவாகைக்குளம், கள்ளிகுளம், மலையடிப்பட்டி, வாகைக்குளம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது அவா் பேசியது: விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நீா்வழிப் பாசன வசதிகள் கிடைக்க முயற்சி செய்வேன். சங்கரன்கோவிலில் செயல்படாமல் இருக்கும் உழவா்சந்தை மீண்டும் செயல்பட உறுதுணையாக இருப்பேன் என்றாா் அவா்.
Advertisement
அப்போது, ஒன்றியச் செயலா் கடற்கரை, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளா் பாலசுப்பிரமணியன், சுந்தரபாண்டியன், மாவட்ட நெசவாளா் அணி உமாசங்கா், மாடசாமி, குமாா், மாவட்ட இலக்கிய அணி பிரேம்குமாா், மாணவரணி மாரியப்பன், தொண்டரணி கோபாலகிருஷ்ணன், மதிமுக சுந்தர்ராஜன், விசிக ஜெரால்டு உள்பட பலா் கலந்துகொண்டனா்.