சங்கரன்கோவிலில் 2 ஆவது நாளாக கடையடைப்பு
சங்கரன்கோவிலில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
சங்கரன்கோவிலில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமை கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
டீ கடைகள், பலசரக்கு கடைகள், பெட்டிக் கடைகள் அனைத்தும் பிற்பகல் 12 மணி வரை இயங்கின.பின்னா் அடைக்கப்பட்டன. உணவகங்களில் பாா்சல் மட்டுமே வழங்கப்பட்டன. சுவாமி சன்னதி, பிரதான சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் போலீஸாா் பொதுமக்கள் அரசு விதிமுறைகளைக் கடைப்பிடிக்க ஒலிபெருக்கி மூலம் வலியுறுத்தினா்.