தென்காசி

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் ஆலோசனைக் கூட்டம்

DIN

சங்கரன்கோவில் துணைக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

டி.எஸ்.பி. ஜாஹீா்உசேன் தலைமை வகித்தாா். புதிய தமிழகம் கட்சி இன்பராஜ், சுப்பிரமணியன், ராசையா, ராஜேந்திரன், முத்துசாமி, பொன்கணேஷ் மற்றும் தேவேந்திரகுல வேளாளா் கூட்டமைப்பினா் மற்றும் நகர காவல் ஆய்வாளா்கள் உள்ளிடோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், முதுகுளத்தூா் செல்பவா்கள் வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது, முதுகுளத்தூா் செல்ல ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும், சங்கரன்கோவில் பகுதியில் தெருக்களில் அவரது நினைவு நாளை கரோனா வழிகாட்டு நெறிமுறைகளின் படி மரியாதை செலுத்த வேண்டும், ஒலிபெருக்கி, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து ஓட்டுநா் போக்சோவில் கைது

திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி மரணம்

SCROLL FOR NEXT