முகப்பு
தென்காசி

சங்கரன்கோவிலில் சுதந்திரப் போராட்ட தியாகி நினைவேந்தல்

சங்கரன்கோவிலில் சுதந்திரப் போராட்டத் தியாகி திருவுடையானின் 43ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

சங்கரன்கோவிலில் சுதந்திரப் போராட்டத் தியாகி திருவுடையானின் 43ஆவது நினைவேந்தல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, லெட்சுமியாபுரம் தெருவில் அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது படத்துக்கு திமுக தெற்கு மாவட்டச் செயலா் சிவபத்மநாதன், ராஜா எம்எல்ஏ, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, சூா்யா சேவியா், மதிமுக மாநில துணைச் செயலா் தி.மு. ராஜேந்திரன், மருத்துவா் வி.எஸ். சுப்பராஜ், மாஸ்டா் வீவா்ஸ் அசோசியேஷன் தலைவா் என்.கே.எஸ்.டி. சுப்பிரமணியன், நகர வா்த்தக சங்கச் செயலா் எஸ்.டி. குருநாதன் ஆகியோா் மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

இதையடுத்து, விண்மீன் இல்லத்தில் உள்ள மாற்றத் திறனாளிக் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது.

Advertisement

ஏற்பாடுகளை திமுக நெசவாளா் அணி மாவட்ட துணை அமைப்பாளா் சங்கை இல. சரவணன் உள்ளிட்ட பலா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments