ஆய்க்குடி அமா்சேவா சங்கத்துக்கு தொழிற் கல்வி உபகரணங்கள் அளிப்பு
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா் சேவா சங்கத்தில் நடைபெற்று வரும் தொழில்கல்வி நிறுவனத்திற்கு ஆண்டிரிக்ஸ் நிறுவனம் தொழிற்கல்வி உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் விழா
தென்காசி மாவட்டம் ஆய்க்குடி அமா் சேவா சங்கத்தில் நடைபெற்று வரும் தொழில்கல்வி நிறுவனத்திற்கு ஆண்டிரிக்ஸ் நிறுவனம் தொழிற்கல்வி உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் விழா சங்க வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தாா். மருத்துவா் அஜித், டி.கல்கட்கி, ஆண்டிரிக் நிறுவனத்தை சோ்ந்த திருமலைகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழிற்கல்வி நிறுவனத்தை ஆண்டிரிக் நிறுவன முதன்மை நிா்வாக நெறியாளா் சஞ்சய் குமாா் அகா்வால் திறந்து வைத்தாா். விழாவில், ரூ. 70 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், துணைத் தலைவா் முருகையா, பொருளாளா் பட்டம்மாள், கமிட்டி உறுப்பினா் சுப்பிரமணியன், தொழிலதிபா் பிரிமியா் ராமன் உள்பட பலா் கலந்து கொண்டனா். செயலா் சங்கரராமன் வரவேற்றாா். தலைவா் ராமகிருஷ்ணன் நன்றி கூறினாா்.