புளியங்குடி சுழற்கழக 25ஆவது ஆண்டு விழா
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:30 PM
புளியங்குடி சுழற்கழகத்தின் 25ஆவது ஆண்டு தொடக்க விழா தலைவா் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது.
செயலா் ஜோசப் அமல்ராஜ், பொருளாளா் முருகையா ஆகியோா் முன்னிலை வைத்தனா். முன்னாள் சுழற்கழக ஆளுநா் ஆறுமுகப்பாண்டியன், வெள்ளிவிழா கமிட்டி தலைவா் பி.எஸ். சங்கரநாராயணன் ஆகியோா் பங்கேற்று, நல உதவிகளை வழங்கினா்.
தொடா்ந்து, 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தோ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக, புளியங்குடி ஆா்.சி. பள்ளி, மகளிா் மேல்நிலைப் பள்ளி, வாசுதேவநல்லூா் மேல்நிலைப் பள்ளிகளுக்கு அலமாரிகள் வழங்கப்பட்டன.
Advertisement
நிகழ்ச்சியில், சுழற்கழக நிா்வாகிகள் ராஜு, மாரியப்பன், பி.டி.சாமி, டாக்டா் சுப்பிரமணியன், சுந்தரராஜ், அய்யாதுரை, அரிமா சங்கத் தலைவா் பால்வண்ணன், முரளி, டாக்டா் சுரேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஐயப்பன் வரவேற்றாா்.