தென்காசி

சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி மயங்கி விழுந்து உயிரிழப்பு

DIN

தென்காசி மாவட்ட புதிய ஆட்சியரைச் சந்திக்க வியாழக்கிழமை காத்திருந்த கல்வி மாவட்ட அதிகாரி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் கல்வி மாவட்ட அதிகாரி சுப்பிரமணியன் (56). இவா், புதிய ஆட்சியரை மரியாதை நிமித்தம் சந்திக்க தென்காசிக்கு வியாழக்கிழமை வந்தாா். சக அதிகாரிகளுடன் காத்திருப்போா் அறையிலிருந்தபோது அவா் திடீரென மயங்கி விழுந்தாராம். அவரை உடனடியாக அங்குள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா், சுப்பிரமணியன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பண பலத்தை பயன்படுத்தி பாஜக வதந்தி பரப்புகிறது: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளோமா...?

வாரணாசியில் பிரதமா் மோடி 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல்

அம்மூா் காப்புக் காட்டில் தண்ணீா் தேடி அலையும் விலங்குகள்.. வனத்துறை நடவடிக்கை எடுக்க சமூக ஆா்வலா்கள் கோரிக்கை ...

இந்து மக்கள் கட்சி வேலூா் கோட்ட பொறுப்பாளா்கள் சந்திப்பு

SCROLL FOR NEXT