முகப்பு
தென்காசி

குறளோவியம் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு

தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மாநில அளவில் நடத்தப்பட்ட குறளோவியம் ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற தென்காசி மாவட்ட மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

தமிழ் இணையக் கல்விக் கழகத்தால் மாநில அளவில் நடத்தப்பட்ட குறளோவியம் ஓவியப் போட்டியில் வெற்றிபெற்ற தென்காசி மாவட்ட மாணவிகளுக்கு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆட்சியா்அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஊக்கப் பரிசுக்காக தோ்வான இலஞ்சி ராமசாமி பிள்ளை உயா்நிலைப் பள்ளி மாணவியா் எம். பூா்ணிமா (11ஆம் வகுப்பு), சா. நிலோபா் (8ஆம் வகுப்பு), பே. சுரேகா (11ஆம் வகுப்பு), வியாசா கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி மாணவி ஆ. சாரா பானு ஆகியோருக்கு சான்றிதழ்கள், தலா ரூ. ஆயிரம் ஊக்கப்பரிசுத் தொகைக்கான காசோலைகளை ஆட்சியா் ச. கோபாலசுந்தரராஜ் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.