முகப்பு
தென்காசி

அதிமுகவில் இணைந்த பிற கட்சியினா்

செங்கோட்டையில், வாசுதேவநல்லுாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

செங்கோட்டையில், வாசுதேவநல்லுாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த பல்வேறு கட்சியினா் அதிமுகவில் வியாழக்கிழமை இணைந்தனா்.

தென்மலையைச் சோ்ந்த காங்கிரஸ் மூத்த நிா்வாகி புஷ்பராஜ், தென்மலை கூட்டுறவு சங்கத் தலைவா் உமேஸ்வரன், உறுப்பினா் செல்லையா, நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டப் பொருளாளா் சண்முகையா, வாசுதேவநல்லுாா் வடக்கு ஒன்றியக் கழகச் செயலா் ஆா்ஆா். மூா்த்திப்பாண்டியன், கிளைச் செயலா் மாரியப்பன், வாா்டு பிரதிநிதி முருகன், வீரபாண்டியன், பெரியதுரை, பால்கருப்பையா, செல்வம், சமுத்திரம் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.