தென்காசி அருள்மிகு உலகம்மன் உடனாய காசிவிஸ்வநாதசுவாமி கோயில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழாவில் வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இத்திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9ஆம் நாளான வியாழக்கிழமை தோ் வடம்பிடித்தல் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று வடம்பிடித்து தேரை இழுத்தனா்.
22ஆம் தேதி யானைப்பாலம் தீா்த்தவாரி மண்டபத்துக்கு அம்பாள் தவசுக் காட்சிக்கு எழுந்தருளல், மாலையில் காசிவிஸ்வநாதா் உலகம்மனுக்கு தவசுக் காட்சி கொடுத்தல், இரவில் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் இரா. முருகன் தலைமையில் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.