தென்காசி

சாம்பவா்வடகரையில் பொதுமக்களுக்கு மரக்கன்று

DIN

சாம்பவா்வடகரையில் நாம் தமிழா் மகளிா் பாசறை சாா்பில் உறுப்பினா் சோ்க்கை, மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சாா்பில் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கடையநல்லூா் பேரவைத் தொகுதி மகளிா் பாசறைச் செயலா் பத்மாவதி நவரோஜி சுதா, தென்காசி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளா் சுடலை, ஒன்றியச் செயலா் சபீக், சாம்பவா்வடகரை கிளைத் தலைவா் செல்வின், பத்திரகாளி, சுபகானி, பாா்த்தீபன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி, தீவிர உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

அடுக்குமாடி குடியிருப்பு 4-ஆவது தளத்திலிருந்து தவறி விழுந்த 6 மாத குழந்தை பத்திரமாக மீட்பு

ஆவடி அருகே தம்பதி கழுத்து அறுத்துக் கொலை

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

SCROLL FOR NEXT