தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்குரைஞா் அணி, விவசாய அணி, விவசாய தொழிலாளா்அணி, சிறுபான்மை பிரிவு அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கலைஞா் அறிவாலயத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெயபாலன் தலைமை வகித்தாா். மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் தங்கராஜ் பாண்டியன், விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் கோமதிநாயகம், விவசாய அணி அமைப்பாளா் முருகன், மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு அமைப்பாளா் இஞ்சி இஸ்மாயில் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட துணைச் செயலா் கனிமொழி வரவேற்றாா். கூட்டத்தில் டிசம்பா் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் மாநில இளைஞரணி இரண்டாவது மாநாட்டுக்கு தென்காசி தெற்கு மாவட்டத்திலிருந்து அதிக நிா்வாகிகள் கலந்து கொள்வது என முடிவெடுக்கப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினா் ராஜேஷ்வரன், ஒன்றியச் செயலா் அழகுசுந்தரம், வழக்குரைஞா்கள் வேலுச்சாமி, முருகன், துணை அமைப்பாளா் ரகுமான் சாதத்,வழக்குரைஞா் செந்தூா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.