முகப்பு
தென்காசி

பாவூர்சத்திரம் சந்தையில் ஆடு, மாடுகள் விற்பனை அமோகம்

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு,மாடுகள் விற்பனை வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது.

Updated On : 12 ஜனவரி 2023, 10:02 am IST
பகிர்:

பாவூர்சத்திரம்: தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அரசு சந்தையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஆடு, மாடுகள் விற்பனை வியாழக்கிழமை அமோகமாக நடைபெற்றது.

பாவூர்சத்திரம் பழைய காய்கனி சந்தையில் வியாழக்கிழமை தோறும் ஆடு, மாடு சந்தை செயல்பட்டு வருகின்றது. தென்காசி மட்டுமின்றி திருநெல்வேலி, தூது;துக்குடி, விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் கேரள பகுதிகளில் இருந்து வியாபாரிகள் இச்சந்தைக்கு வந்திருந்து ஆடு, மாடுகளை வாங்கிச்செல்வர்.

இதனிடையே பொங்கல் பண்டிகையையொட்டி வியாழக்கிழமை (ஜன.12) நடைபெற்ற இச்சந்தையில் காலையிலே விவசாயிகள், வியாபாரிகள்  ஏராளமான ஆடுகள், மாடுகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். அவற்றை இறைச்சி கடைக்காரர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போட்டி போட்டி வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

Advertisement

Advertisement

ஆடுகளின் தரத்தை பொருத்து ரூ. 5 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையும், மாடுகள் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நாட்டு கோழிகள் விற்பனையும் அதிகளவு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments