முகப்பு
தென்காசி

கேரள லாட்டரி சீட்டுகளுடன் தென்காசியில் ஒருவா் கைது

கேரளத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்ய முயன்றவரை புளியறை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:18 AM
பகிர்:
Updated On : 4 செப்டம்பர், 2024 at 8:09 PM

கேரளத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்ய முயன்றவரை புளியறை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலத்தில் இருந்து மொத்தமாக லாட்டரி சீட்டுகள் வாங்கி வருவதாக புளியறை போலீஸாாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கேரளத்திலிருந்து வந்த வாகனங்களை போலீஸாா் சோதனையிட்டனா்.

Updated On : 5 செப்டம்பர், 2024 at 5:18 AM

பாவூா்சத்திரம் காவல் உதவி ஆய்வாளா் உமா மகேஸ்வரி தலைமையிலான போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டபோது, ஆவுடையானூா் ரஹ்மானியாபுரம் பள்ளிவாசல் தெருவை சோ்ந்த மு. மைதீன்(50 )என்பவரிடம் கேரள லாட்டரிகள் 1,788 எண்ணம் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ79ஆயிரத்து 800ஆகும். இதுகுறித்து புளியறை போலீஸாா் வழக்குப்பதிந்து மைதீனை கைதுசெய்து லாட்டரி சீட்டுகளை கைப்பற்றினா்.

Advertisement