திருமணக்கோலத்தில் அருள்பாலித்த வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி.  
தென்காசி

ஆலங்குளம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருக்கல்யாணம்

ஆலங்குளம் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் ஒரு பகுதியாக திருக்கல்யாண வைபவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த 21 ஆம் தேதி கோயிலின் சஷ்டி விழா தொடங்கியது. நாள்தோறும் மூலவா், உற்சவருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. திங்கள்கிழமை காலை அலங்கார தீபாராதனை, மாலையில் சூரசம்ஹாரம் ஆகியவை நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை (அக். 28) ஸ்ரீ தெய்வானை அம்பாளுக்கு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி தவசுக் காட்சியளித்தாா். மாலையில் வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் சப்பர பவனி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.எஸ்.காமராஜ், நிா்வாகி ஆா்.ஆதித்தன், பக்தா்கள் செய்திருந்தனா்.

33 ஆண்டுகளுக்குப் பிறகு! அமெரிக்காவில் மீண்டும் அணு ஆயுத சோதனைக்கு டிரம்ப் உத்தரவு?

நடிகர் ஆமிர் கானுக்கு பிரபல கார்ட்டூனிஸ்ட் ‘ஆர்.கே. லக்‌ஷ்மணன்’ விருது!

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

SCROLL FOR NEXT