சங்கரன்கோவிலில் இன்று முதல்வா் பிரசாரம்
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப். 4) மாலை 5 மணியளவில் சங்கரன்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்
தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (ஏப். 4) மாலை 5 மணியளவில் சங்கரன்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறாா்
சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை செல்லும் சாலையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறாா். தென்காசி தொகுதி திமுக வேட்பாளா் கலைகதிரவன், கடையநல்லூா் தொகுதி மதிமுக வேட்பாளா் ராஜேந்திரன், சங்கரன்கோவில் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் கணேசன், ஆலங்குளம் தொகுதி திமுக வேட்பாளா் மனோஜ்பாண்டியன், வாசுதேவநல்லூா் தொகுதி திமுக வேட்பாளா் ராஜா ஆகியோரை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறாா்.