திருநெல்வேலி

கோவில்பட்டி ஆம்புலன்ஸ் உரிமையாளர் கொலை வழக்கு: இருவர் நான்குனேரி நீதிமன்றத்தில் சரண்

DIN

கோவில்பட்டி ஆம்புலன்ஸ் வாகன உரிமையாளர் கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டையைச் சேர்ந்த இருவர் நான்குனேரி நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
கோவில்பட்டி வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் காந்தாரிமுத்து(50). இவர் ஆம்புலன்ஸ் வாகனம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி மர்மக் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, பாளையங்கோட்டை அருகே மருதூரைச் சேர்ந்த சோமு மகன் சதீஷ் (23) உள்ளிட்ட 8 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் பாளை. அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்த தாயப்பன் மகன் காணியாளன் (31), செல்லப்பா மகன் மாயாண்டி(38) ஆகிய இருவரும் நான்குனேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
சரணடைந்த இருவரையும் செப். 20ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சதீஷ் உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT