திருநெல்வேலி

பாளை. கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் விநியோகம்

DIN

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நிலவேம்புக் குடிநீர் வழங்கும் முகாம் நடைபெற்றது.
கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம், சீடு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு முகாமுக்கு, கல்லூரி முதல்வர் மு. முஹம்மதுசாதிக் தலைமை வகித்தார்.
சீடு அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் பொன்னம்பலம், சித்த மருத்துவர் வனிதா சங்கர், டாக்டர்கள் டி. ராஜாசங்கர், ஜி. ராஜாசங்கர், அரசு உதவி பெறா பாடப்பிரிவு இயக்குநர் ஏ. அப்துல்காதர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முகாமில், கல்லூரி மாணவர்களுக்கு நிலவேம்புக் குடிநீர் வழங்கப்பட்டது. திட்ட அலுவலர் மு. சாகுல்ஹமீது வரவேற்றார். பேராசிரியை பிரேமலதா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT