108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அம்பாசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அம்பாசமுத்திரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஊதிய உயர்வு வேண்டும், பணி நேரத்தை 8 மணி நேரமாக்க வேண்டும், ஊழியர் விரோதப் போக்கை கடைப்பிடிக்கும் 108 சேவை நடத்தும் தனியார் நிர்வாகத்தின் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்திற்கு கோபால கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.