உவரி விபத்து: மேலும் ஒருவர் சாவு
உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார்.
உவரி அருகே கார் கவிழ்ந்து நேரிட்ட விபத்தில் மேலும் ஒருவர் உயிழந்தார்.
உவரி ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள இடிந்தகரை கிராமத்தில் இருந்து சனிக்கிழமை இரவு 9 பேர் வந்த கார் உவரி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆண்டன் என்பவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். 5 பேர் பலத்த காயத்துடன் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதில், அபிஷேக், அஜித், செல்வம் ஆகிய 3 பேர் பாளை. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அபிஷேக் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். இது குறித்து உவரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.