முகப்பு
தற்போதைய செய்திகள்

போர் எதிரொலி! விமானிகளின் பணிநேரத்தை நீட்டிக்கக் கோரும் ஏர் இந்தியா!

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமானிகளின் பணி நேரத்தை நீட்டிக்கக் கோரிய ஏர் இந்தியா குறித்து...

Updated On : 13 மார்ச், 2026 at 7:57 AM
ஏர் இந்தியா
பகிர்:

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா போர் காரணமாக விமானிகளின் பணிநேரத்தை தற்காலிகமாக நீட்டிக்க ஏர் இந்தியா நிறுவனம் பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) அவகாசம் கேட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் நிலவிவரும் போர்ச்சூழல் காரணமாக சில முக்கிய வான்வெளிகள் மூடப்பட்டுள்ளன. எனவே, வழக்கமாகச் செல்லும் பாதையை மாற்றி பிற பாதைகளில் விமானங்கள் இயக்கப்படுவதால் நேரம் அதிகமாக விரையமாகிறது.

ஆகவே, சர்வதேச விமானிகளுக்கு விமானப் பணிநேரக் கட்டுப்பாட்டு விதிகளில் (FDTL) இருந்து தற்காலிக விலக்கு அளிக்குமாறு, விமான ஒழுங்குமுறை ஆணையமான பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (டிஜிசிஏ) ஏர் இந்தியா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய விமானப் பணி நேரக் கட்டுப்பாட்டு விதிகளின் (FDTL) கீழ், விமானிகளுக்கு வாரத்திற்கு 48 மணிநேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும். இது முந்தைய 36 மணிநேரத்துடன் ஒப்பிடும்போது, "இந்திய விமான நிறுவனங்களின் சர்வதேச விமானிகளுக்கு பகல் நேரத்தில் அதிகபட்சமாக 13 மணிநேரமும் இரவு நேரத்தில் 10 மணிநேரமும் பணி நேரம் அனுமதிக்கப்படுகிறது" என்று மூத்த விமானி ஒருவர் கூறினார்.

இந்தப் போர்ச்சூழல் தணியும் வரை மட்டுமே விலக்கு அளிக்குமாறு கேட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு முதல் பாகிஸ்தான் வான்வெளி மூடப்பட்டதாலும், இப்போது ஈரானிய வான்வெளி மூடப்பட்டதாலுமே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பொது விமான போக்குவரத்து ஆணையம் (டிஜிசிஏ) எந்தவித பதிலையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

summary

Air India has requested the DGCA to temporarily extend the working hours of its pilots due to the Iran-Israel-US war.

முழு கட்டுரையைப் படிக்க →