திருநெல்வேலி

நெல்லையில் டிடிவி தினகரன் அணி ஆலோசனைக் கூட்டம்

DIN

திருநெல்வேலியில் டிடிவி தினகரன் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
டிடிவி தினகரன் அணியில் திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலராக கல்லூர் இ. வேலாயுதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அணியின் பாளையங்கோட்டை, மானூர் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியங்கள், நாராயணம்மாள்புரம், சங்கர்நகர் நகர நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் பால் கண்ணன், முன்னாள் மாநகராட்சி துணைமேயர் பூ. ஜெகநாதன், முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எஸ். பரமசிவஐயப்பன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலர் வி.கே.பி. சங்கர், மாவட்ட தகவல் தொழில்நுட்பப்பிரிவுச் செயலர் எம்.சி. ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்வது, பிப். 24 இல் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவது, உள்ளாட்சித் தேர்தல், பேரவைத் தேர்தலில் வெற்றிக்கு பாடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

வாரணம் ஆயிரம் - பிரபல டிவியின் புதிய தொடர்!

நாகர்கோவில்-சென்னை சிறப்பு ரயில் காலதாமதமாக புறப்படும் -ரயில்வே அறிவிப்பு

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

SCROLL FOR NEXT