திருநெல்வேலி

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு எதிர்ப்பு: பாளை.யில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

DIN

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து பாளையங்கோட்டையில் மாணவர்கள்-இளைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது, போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். நெரிசல் மற்றும் தடியடியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி பாளையங்கோட்டை நேருஜி திடலில் மாணவர்கள் சார்பில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாணவர்கள்-இளைஞர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆ.முத்துப்பாண்டி, கு.டேவிட் ஆகியோர் தலைமை வகித்தனர். இணை ஒருங்கிணைப்பாளர்கள் ம.நாகூர்மீரான் என்ற பரோஸ், விக்னேஷ், சுபாஷ், கணேஷ், பாசித், யாபேஸ்பாண்டியன், விஜி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT