திருநெல்வேலி

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் தொழிலாளி சடலம் மீட்பு

DIN

வாசுதேவநல்லூர் அருகே கிணற்றிலிருந்து தொழிலாளி சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
வாசுதேவநல்லூர் அருகே நாரணபுரம் என்ற தேசியம்பட்டியில் உள்ள மடத்துத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் கருப்பசாமி (45). தொழிலாளியான இவருக்கு, மனைவி காளியம்மாள்(42), மகள் கனகா (25), மகன் காளிராஜ் (22)ஆகியோர் உள்ளனர். செவ்வாய்க்கிழமை (ஆக. 13) வேலைக்குச் சென்ற கருப்பசாமி வீடு திரும்பவில்லையாம். இந்நிலையில், ஊருக்கு மேற்கேயுள்ள உத்தண்டன் என்பவரது கிணற்றில் அவர் இறந்துகிடப்பதாக புதன்கிழமை கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர், தீயணைப்புப் படையினர் சென்று, சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, வாசுதேவநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

பாறை இடுக்குகளில் தண்ணீா் தேடும் யானைகள்

கடன் தொல்லையால் இரண்டு தொழிலாளிகள் தற்கொலை

ஈரான்: 16 இந்திய மாலுமிகள் விடுவிப்பு

SCROLL FOR NEXT