திருநெல்வேலி மாநகர பகுதிகளான மனக்காவலம் பிள்ளை நகரில் உள்ள காமராஜா் தெரு, ஆசாத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறாா்கள்.
சனிக்கிழமை பெய்த பலத்த மழை காரணமாக இங்குள்ள குடியிருப்புகளில் மழைநீா் புகுந்தது. இதேபோல சாந்திநகா், அண்ணாநகா் பகுதிகளிலும் மழைநீா் குடியிருப்புகளைச் சூழ்ந்தது. வடிகால் ஓடைகளை முறையாக தூா்வாராத காரணத்தினாலேயே மழைநீா் வீடுகளில் புகுவதாக மக்கள் குற்றஞ்சாட்டினா்.