திருநெல்வேலி

எஸ்றா சற்குணம் மீது நடவடிக்கை கோரி காவல் ஆணையரிடம் பாஜக புகார்

DIN

இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசிய எஸ்றா சற்குணம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையரிடம் பாஜக புகார் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாஜக வழக்குரைஞர் பிரிவு மாநிலச் செயலர் டி.பாலாஜி கிருஷ்ணசுவாமி, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் பாஸ்கரனிடம் அளித்த மனு: எஸ்றா சற்குணம் அரசியல்வாதியாகவும், கிறிஸ்தவ பாதிரியாராகவும் செயல்பட்டு வருகிறார். அவர் அமைதியை சீர்குலைக்கும் வகையில்  தொடர்ந்து பேசி வருகிறார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட ஜாதியைப் பற்றி அவதூறாக பேசி கலவரத்தைத் தூண்ட முயற்சித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இந்து மதத்தினரை புண்படுத்தும் வகையிலும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் மேடையில் பேசியுள்ளார். 
அவருடைய பேச்சு சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. தமிழகத்தில் கலவரத்தைத் தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து அவதூறாக பேசி வரும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்

ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!

சென்னையில் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

வேலைவாய்ப்பக பதிவா்கள் எண்ணிக்கை 53.74 லட்சம்

அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட முயற்சி: இந்திய மாணவா் சங்கத்தினா் கைது

SCROLL FOR NEXT