திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கூடங்குளம் அணு மின் நிலைய வளாகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பின் தலைவர் சுப. உதயகுமாரன் தலைமையில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. இதனால் ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக அணுசக்திக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தெரிவித்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சந்திப்பு ரயில் நிலையம் முன் சனிக்கிழமை ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.