திருநெல்வேலி

வேன் கவிழ்ந்து 15 பேர் காயம்

நான்குனேரி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர். 

DIN


நான்குனேரி அருகே சனிக்கிழமை வேன் கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர். 
கன்னியாகுமரி மாவட்டம்,  குமாரபுரத்தைச் சேர்ந்த 15 பேர்,  தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியில் நடைபெறும் ஜெபக்கூட்டத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.  வேனை, குமாரபுரத்தைச் சேர்ந்த ஜெகன் ஓட்டி வந்தார்.   நான்குனேரி அருகே பெருமாள்புரம் நான்குவழிச்சாலையில்  வேன் வந்தபோது எதிரே வந்த மற்றொரு வாகனத்துக்கு வழிவிடுவதற்காக ஓட்டுநர் வேனை சாலையோரம் திருப்ப முயன்றாராம்.  அப்போது கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.  இதில் ஓட்டுநர்  உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.   காயமடைந்தவர்கள்  நான்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சென்றனர்.  இதுகுறித்து நான்குனேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT