திருநெல்வேலி

பொன்னாக்குடியில் விபத்து: பிஎஸ்என்எல் ஊழியர் பலி

DIN

பொன்னாக்குடி அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து காயமுற்ற பிஎஸ்என்எல் ஊழியர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள வி.எம்.சத்திரம் பிஎஸ்என்எல் குடியிருப்பைச் சேர்ந்த பாண்டியன் மகன் முருகன் (54). பிஎஸ்என்எல் ஊழியரான இவர், தனது மோட்டார் சைக்கிளில் சில தினங்களுக்கு முன்பு பொன்னாக்குடியில் இருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, நான்குவழிச் சாலையோரம் தவறி விழுந்த அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய முன்னாள் அமைச்சர் ஸ்ரீனிவாச பிரசாத் காலமானார்

தஞ்சாவூர் அருகே காய்கறி வியாபாரி வெட்டிப் படுகொலை

தப்பிக்க வழியே இல்லை: 3 நாள்களுக்கு வெப்ப அலை! அதன்பிறகு?

ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது

சத்தீஸ்கரில் கோர விபத்து: நின்றிருந்த லாரி மீது டிரக் மோதியதில் 8 பேர் பலி

SCROLL FOR NEXT