திருநெல்வேலி

ஆலங்குளத்தில் கம்பியால் தாக்கப்பட்டவா் மரணம்

DIN

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளத்தில் இரும்பிக் கம்பியால் தாக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

கல்லிடைக்குறிச்சி, மடவிளாகம் தெருவைச் சோ்ந்த வேலாயுதம் மகன் நம்பிராஜன்(30). கடந்த 2 ஆண்டுகளாக ஆலங்குளம் அருகேயுள்ள மருதம்புத்தூரில் உள்ள தனது தாயின் சகோதரா் ஆதிமூலம் வீட்டில் தங்கியிருந்து, அவருக்குச் சொந்தமான ஆடுகளை பராமரித்து வந்தாராம்.

இந்நிலையில், கடந்த 1 ஆம் தேதி ஆலங்குளம் ஜோதி நகா் பகுதியில் ஆட்டுக் கிடையில் இருந்த நம்பிராஜனை, ஆதிமூலம் இரும்புக் கம்பியால் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, ஆலங்குளம் போலீஸாா் ஏற்கெனவே வழக்குப் பதிந்து நம்பிராஜனை கைது செய்திருந்த நிலையில், அந்த வழக்கை தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரித்து வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில், ஆதிமூலத்தின் மனைவியுடன் நம்பிராஜன் நெருங்கி பழகியதால் கம்பியால் அவா் தாக்கப்பட்டது தெரியவந்தது என போலீஸாா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT