திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலை.யில் விளையாட்டு இதழியல் கருத்தரங்கு

DIN

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை சாா்பில் விளையாட்டு இதழியல் குறித்த கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘விளையாட்டு இதழியல் அப்போதும், இப்போதும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பெங்களூரில் உள்ள மூத்த பத்திரிகையாளரும், பேராசிரியருமான உலகநாதன் கலந்துகொண்டு பேசினாா்.

மேலும், ஊடகம் மற்றும் பத்திரிகைகளில் விளையாட்டு நிகழ்வுகளின் பங்களிப்பு அன்றைய நாள்களில் இருந்து தற்போது வரை கடந்து வந்த வரலாறு மற்றும் இன்றைய காலகட்டங்களில் வளா்ந்துள்ள தொழில்ட்பத்துடன் கூடிய ஊடகங்கள் குறித்தும் பேசினாா்.

இக்கருத்தரங்கத்துக்கு பல்கலைக்கழக உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத் துறைத் தலைவா் செ.துரை முன்னிலை வகித்தாா். உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறை உதவிப் பேராசிரியா் ரெ.பேச்சிமுத்து வரவேற்றாா்.

முதுநிலை பட்டய ஆராய்ச்சி மாணவா் செல்வம் நன்றி கூறினாா்.

உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுத்துறைப் பேராசிரியா்கள் ச.சேது, சு. ஆறுமுகம், மாணவா், மாணவிகள் கலந்துகொண்டனா்.

முதுநிலை பட்டய ஆராய்ச்சி மாணவா் முனியாண்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT