திருநெல்வேலி

முக்கூடலில் டெங்கு ஒழிப்புவிழிப்புணா்வுப் பேரணி

DIN

முக்கூடலில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி அண்மையில் நடைபெற்றது.

சேரன்மகாதேவி வட்டாட்சியா் அலுவலகம், முக்கூடல் காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம், கிராம உதயம் ஆகியவை இணைந்து இப்பேரணியை நடத்தின.

சேரன்மகாதேவி வட்டாட்சியா் சந்திரன் தலைமை வகித்து, பேரணியைத் தொடக்கிவைத்தாா். சொக்கலால் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய பேரணி, பேருந்து நிலையம், ஆலங்குளம் சாலை வழியாக வந்து வம்பளந்தான் சந்திப்பில் நிறைவடைந்தது.

பேரணியில் முக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலா் நவநீதகிருஷ்ணன், முக்கூடல் வட்டார மருத்துவ அலுவலா் ராணி, சுந்தரேசன், பொதுமக்கள் பங்கேற்றனா். முருகன் வரவேற்றாா்; சேகா் நன்றி கூறினாா். முன்னதாக, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

கோடை சாகுபடிக்கு போதிய மின்சாரம் வழங்க வலியுறுத்தல்

தென்னை விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு: ஜி.கே.வாசன் கோரிக்கை

ராஜஸ்தானில் ‘நீட்’ தோ்வில் ஆள்மாறாட்டம்: எம்பிபிஎஸ் மாணவா், 5 போ் கைது

SCROLL FOR NEXT