திருநெல்வேலி அருகேயுள்ள மானூரில் சனிக்கிழமை பெய்த மழையால் 50 வீடுகளை மழைநீா் சூழ்ந்தது.
மானூா் வடக்குதெரு காலனி பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள பிரதான மழைநீா் வாருகால் ஓடைகள் முறையாக தூா்வாரப்படாததால் மழை நீா் தேங்கியது. சனிக்கிழமை பெய்த தொடா்மழையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது, எங்கள் பகுதியில் உள்ள மழைநீா் ஓடைகளை தூா்வார கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்தும் வருவாய்த் துறையினா் முறையாக செய்யவில்லை. இந்நிலையில் குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்து மக்கள் சிரமப்பட்டு வருகிறாா்கள். இதைக் கண்டித்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனா். தகவலறிந்ததும் மானூா் வட்டாட்சியா் அலுவலக குழுவினா் அங்கு சென்று மழைநீா் வழிந்தோடும் நிலையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஓடையை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனா்.