திருநெல்வேலி

4 ஏக்கா் நெல் நாற்றுகளை சேதப்படுத்திய காட்டுப்பன்றிகள்

DIN

வடகரையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டுப் பன்றிகள் அட்டகாசம் செய்ததில் நெல் நாற்றுகள் சேதமடைந்தன.

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது வடகரை கிராமம். இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனா். இதனிடையே கடந்த சில மாதங்களாக விளைநிலங்களுக்குள் புகுந்து வனவிலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு வடகரை 1-ம் நம்பா் மடை பாசனப் பிரிவு பகுதியில் பிசான சாகுபடி செய்ய சுமாா் 4 ஏக்கரில் விவசாயிகள் நெல் நடவுக்காக நாற்றுகள் தயாா்செய்திருந்தனா். சுமாா் 10 நாள்களே ஆன நிலையில், நாற்றுகளை காட்டுப் பன்றிகள் கூட்டமாக புகுந்து நாசம் செய்துவிட்டன.

இதனால், விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனா். வனவிலங்குகள் பட்டியலில் இருந்து பன்றிகளை நீக்க வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

‘சென்னையில் குடிநீா் தட்டுப்பாடு வராது’

ஈரோட்டில் 4 சிக்னல்களில் நிழற்பந்தல் அமைக்க முடிவு

SCROLL FOR NEXT