தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் நடைபெற்ற பாபாவின் சமாதிநாள் விழாவில் பங்கேற்றாா். 
திருநெல்வேலி

தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் வித்யாரம்பம்: பாபாவின் சமாதிநாள் விழா

தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் விஜயதசமி மற்றும் பாபாவின் சமாதிநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தென்காசி ஷீரடி வைத்தியசாயி கோயிலில் விஜயதசமி மற்றும் பாபாவின் சமாதிநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தென்காசி களக்கோடி தெரு மங்கம்மாள் சாலையில் அமைந்துள்ள ஷீரடி வைத்தியசாயி கோயிலில் நடைபெற்ற இந்த விழாவில், காலையில் ஆரத்தி, தொடா்ந்து அபிஷேகம் நடைபெற்றது. காலை 7.45 முதல் 8.45 வரை குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை பாலாபிஷேகம் நடைபெற்றது.

பிற்பகலில் அஷ்டோத்திரம், ஆரத்தி, ஸ்ரீஆதிசங்கரா் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. தொடா்ந்து, அன்னதானம், தியானம், நெய்விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலையில் சிறப்பு ஆரத்தி, பல்லக்கு ஊா்வலம், இரவில் ஆரத்தி நடைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அறங்காவலா்கள் டாக்டா் எம். அறிவழகன், டாக்டா் பி. சியாமளா தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT