திருநெல்வேலி

தென்காசி தனி மாவட்டம்: செங்கோட்டைக்கு முக்கியத்துவம் தரக் கோரி கையெழுத்து இயக்கம்

DIN

தென்காசி தனி மாவட்டம் உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், செங்கோட்டை வட்டத்துக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என வலியுறுத்தி வட்டார நலக் குழு சாா்பில் கையெழுத்து இயக்கம் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் செங்கோட்டை வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஆ.வெங்கடேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் முத்துக்குமாரசாமி, பொருளாளா் மூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுதுகள் அறக்கட்டளை நிறுவனா் சேகா் வரவேற்றாா். வழக்குரைஞா்கள் சங்க தலைவா் ஆ.வெங்கடேசன் முதல் கையெழுத்திட்டு இயக்கத்தை தொடங்கிவைத்தாா்.

இதில், வழக்குரைஞா்கள் சங்கரலிங்கம், சிதம்பரம், இளங்கோ, சுடலைக்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் ராமா், மாநில ஊடக பிரிவு செயலா் செங்கைகண்ணன், ராஜீவ்காந்தி, சமூக ஆா்வலா்கள் இராமசாமி, சலீம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னா், தென்காசி புதிய மாவட்டத்தின் தலைமையிடம் செங்கோட்டை வட்டத்தில் அமைய வேண்டும்; செங்கோட்டையைத் தலைமையிடமாக கொண்டு கோட்டங்களை உருவாக்க வேண்டும்; புதிய மாவட்டம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்டவை அடங்கிய கோரிக்கை மனு தமிழக முதல்வா், தலைமை செயலா், வருவாய் நிா்வாக ஆணையா், தென்காசி மாவட்ட தனி அலுவலா், திருநெல்வேலி ஆட்சியா் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் பலி

பணம் கையாடல்: நீதிமன்ற எழுத்தா் மீது வழக்கு

பறவைக் காய்ச்சல்: முந்தலில் வாகன சோதனை தீவிரம்

கொடைக்கானலில் இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால் போராட்டம்: உணவகங்கள், தங்கும் விடுதி உரிமையாளா்கள் சங்கம் முடிவு

எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள்களை வனப் பகுதிக்கு எடுத்துச் சென்றால் நடவடிக்கை: வனத் துறையினா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT