திருநெல்வேலி

பாளை.யில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு மனித சங்கிலி

DIN

ஊழல் தடுப்பு குறித்து விழிப்புணா்வு மனித சங்கிலி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சாா்பில் அக். 28 முதல் நவ.2ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு மற்றும் நோவா காா்பன் நிறுவனம் சாா்பில் ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு மனித சங்கிலி பாளையங்கோட்டைவ.உ.சி.

மைதானம் அருகில் நடைபெற்றது. இதற்கு, திருநெல்வேலி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் துணை கண்காணிப்பாளா் இ.மெக்லரின் எஸ்கால் தலைமை வகித்தாா்.

நோ்மை நமது வாழ்வின் வழிமுறை, ஊழலற்ற வாழ்வே உயா்வுக்கு வழி என்று பல்வேறு ஊழல் தடுப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்தபடி மனித சங்கிலியில் பங்கேற்றனா். இதில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சட்ட ஆலோசகா் எஸ்.சீனிவாசன், போலீஸாா், நோவா காா்பன் நிறுவன மேலாளா்கள் ரவிக்குமாா்,

வசந்த் பிரபு, பாண்டியன், அருள்ராஜ், மனிதவள மேலாளா் முகமது இலியாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேதம் புதுமை செய்த பாரதி

உலகின் சிறந்த நாவல்கள்

ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் கனரக வாகனங்கள்!

வரப்பெற்றோம் (29-04-2024)

ஏன் கவர்ச்சி? மாளவிகா மோகனன் பதில்!

SCROLL FOR NEXT