திருநெல்வேலி

பத்ரிநாத் யாத்திரையின் போது இறந்த ஓட்டுநர் சடலம் களக்காடு வந்தது

DIN

பத்ரிநாத் யாத்திரையின் போது மூச்சுத்திணறி இறந்த களக்காடு அரசுப் பேருந்து ஓட்டுநரின் சடலம்  புதன்கிழமை களக்காடு வந்தது. 
களக்காடு ஜவஹர் வீதியைச் சேர்ந்தவர் பகவதியப்பன் (52). இவர் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார்.  செப்.4 ஆம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் சிவன் கோயிலுக்கு யாத்திரை சென்ற  இவர், செப்.14ஆம் தேதி கோயிலுக்கு மலையேறிச் செல்லும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தார்.  இது குறித்து களக்காட்டில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உறவினர்கள் தில்லி சென்று சடலத்தை ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி புதன்கிழமை  சடலம்  களக்காடு  கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து, உறவினர்கள், ஊர் மக்கள் அஞ்சலி செலுத்தினர். 
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் கே.ஆர்.பி. பிரபாகரன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

திருப்பூா் வாக்கு எண்ணும் மையத்தில் கூடுதலாக 8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

பெண் தொழிலாளியைத் தாக்கியவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT