முகப்பு
திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே மாமனார் கத்தியால் குத்தி கொலை: மருமகன் கைது

சங்கரன்கோவில் அருகே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த மருமகனைத் தட்டிக் கேட்ட மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

சங்கரன்கோவில் அருகே மாமனார் கத்தியால் குத்தி கொலை: மருமகன் கைது

சங்கரன்கோவில் அருகே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த மருமகனைத் தட்டிக் கேட்ட மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:09 PM
பகிர்:

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அருகே அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்த மருமகனைத் தட்டிக் கேட்ட மாமனார் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக மருமகனைப் போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில் அருகேயுள்ள மைப்பாறையைச் சேர்ந்தவர் அய்யனார்(60). இவரது மகள் சஞ்சிதா முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கத்தில் கரூர் அருகேயுள்ள புலவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரைக் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 3 மாத குழந்தை உள்ளது. செல்வக்குமார் தனது மனைவி, குழந்தையுடன் மாமனார் அய்யனார் வீட்டில் தங்கி கிடைத்த வேலையைச் செய்து வந்தார். இவர் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டில் வந்து தகராறு செய்வாராம்.

இந்நிலையில் புதன்கிழமை இரவு செல்வக்குமார் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது அய்யனார் தட்டிக்கேட்டாராம். இதனால் அய்யனாருக்கும், செல்வக்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த செல்வக்குமார் கத்தியால் அய்யனாரை குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்ததும் திருவேங்கடம் போலீசார் விரைந்து சென்று அய்யனார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக செல்வக்குமாரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →