திருநெல்வேலி

பாளை.யில் மாயமான மூதாட்டி தாமிரவருணியில் சடலமாக மீட்பு

பாளையங்கோட்டையில் மாயமான மூதாட்டி தாமிவருணி நதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

DIN

பாளையங்கோட்டையில் மாயமான மூதாட்டி தாமிவருணி நதியில் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

பாளையங்கோட்டையில் உள்ள தில்லை கூத்தனாா் தெரு முருகன் மனைவி கல்யாணி (65). இவா், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். கடந்த 28 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவா் மாயமானாராம். இதுகுறித்து அவரது மகன் முத்துகணேசன் அளித்த புகாரின்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இதற்கிடையே திருநெல்வேலி கொக்கிரகுளம் பகுதியில் தாமிரவருணி ஆற்றில் பெண் சடலம் மிதப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பாளையங்கோட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் சடலமாகக் கிடந்தவா் ஏற்கெனவே மாயமான கல்யாணி என்பது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT