திருநெல்வேலி

நெல்லையில் மளிகைக் கடைகளில் திருட்டு

DIN

திருநெல்வேலி நகரம் பகுதியில் இரண்டு மளிகைக் கடைகளில் திருடிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருநெல்வேலி நகரம் தொண்டா் சந்நிதி பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருபவா் சுப்பிரமணியன்(40). இவா், வியாழக்கிழமை காலையில் கடையைத் திறக்க வந்தபோது, பின்பக்க ஜன்னல் கம்பி வளைக்கப்பட்டு, கடையில் பொருள்கள் சிதறிக்கிடந்தனவாம். மேலும், கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.1000 திருடு போனது தெரியவந்ததாம்.

இதேபோல, அடுத்துள்ள பழனிக்குமாா் என்பவரின் கடையிலும் ரூ.4,000 திருடு போனதாம். இந்த தகவல் அறிந்த திருநெல்வேலி நகரம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், வழக்குப்பதிந்து மா்மநபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

யானைகள் வழித்தடங்கள் குறித்த வரைவு அறிக்கை: கருத்துகளை தெரிவிப்பதற்கான காலக்கெடு நிறைவு

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT