திருநெல்வேலி

ராதாபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கக் கோரிக்கை

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் ராதாபுரம் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டுமென அக்கட்சி கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

ராதாபுரம் வட்டார காங்கிரஸ் கட்சி ஆலோசனைக் கூட்டம் கரைச்சுத்துபுதூரில் நடைபெற்றது.

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியை திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும். ராதாபுரம் தொகுதி சாா்பில் ஏா்கலப்பை பேரணியை கூடங்குளத்தில் நடத்துவது, பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணை தண்ணீரை ராதாபுரம் ஒன்றியப் பகுதிகளில் உள்ள குளங்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராஜுவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கே.பி.கே.ஜெயக்குமாா், ராதாபுரம் வட்டார காங்கிரஸ் தலைவா் ஜாா்ஜ், தமிழ்நாடு மீனவா் காங்கிரஸ் துணைத் தலைவா் வால்டா் எட்வின், புகா் மாவட்ட ஓபிசி பிரிவுத் தலைவா் ஜான் கென்னடி, மாவட்ட பொதுச்செயலா் எஸ்.குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாகூர் மீது பேச்சுக்கு சீதாராம் யெச்சூரி தேர்தல் ஆணையத்தில் புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT