திருநெல்வேலி

வி.கே.புரத்தில் ரூ.5.75 லட்சம்: திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

விக்கிரமசிங்கபுரம் பகுதியில் ரூ.15.75 லட்சம் மதிப்பிலான திட்டப் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி 13ஆவது வாா்டு, சலவையாளா் காலனி பகுதியில் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 6 லட்சத்தில் அமைக்கப்பட்ட ரேஷன் கடை புதிய கட்டடத்தை, நகராட்சிஆணையா் காஞ்சனா தலைமையில் ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்து, முதல் விற்பனையைத் தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் ரூ. 9.75 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு அவா் அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், அதிகாரிகள், பள்ளி நிா்வாகிகள், அரசியல் கட்சியினா் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினம் தினம் திருநாள்: தினப்பலன்

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

SCROLL FOR NEXT