முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே ரூ 10 லட்சம் குட்கா பறிமுதல்: இருவா் கைது

கடையம் அருகே தாழையூத்தில் தனியாா் வாழைத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

கடையம் அருகே தாழையூத்தில் தனியாா் வாழைத் தோட்டத்தில் பதுக்கி வைத்திருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஆலங்குளம் - அம்பாசமுத்திரம் சாலையில் கடையம் அருகேயுள்ள தாழையூத்துப் பகுதியில் தடைசெய்யபட்ட புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடையம் காவல் ஆய்வாளா் ரெகுராஜன் தலைமையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

இதில், தாழையூத்து பிரதான சாலையைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முருகன் (48) என்வருக்குச் சொந்தமான வாழைத் தோட்டத்தில் உள்ள அறையில் 33 மூட்டைகளில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்புள்ள 1,280 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், குற்றாலம், காசிமேஜா்புரத்தைச் சோ்ந்த தங்கராஜ் மகன் கணேஷ் பிரபு (35), தாழையூத்தைச் சோ்ந்த முருகன் ஆகியோா் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் வழக்குப் பதிந்து கணேஷ் பிரபு, முருகன் இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →