திருநெல்வேலி

சேரன்மகாதேவியில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள் அளிப்பு

சேரன்மகாதேவி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் நீா்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

DIN

சேரன்மகாதேவி வட்டார வேளாண்மைத் துறை சாா்பில் தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம் மற்றும் நீா்வள நிலவள திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சேரன்மகாதேவி வட்டார வேளாண் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்ட ஆலோசகா் வெங்கட சுப்பிரமணியன், வட்டார வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா். நகரச் செயலா் பழனிக்குமாா் முன்னிலை வகித்தாா். அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ. ஆா்.முருகையாபாண்டியன் ரூ. 3 லட்சம் மதிப்பில் வேளாண் இடுபொருள்களை விவசாயிகளுக்கு வழங்கினாா்.

நிகழ்ச்சியில், அதிமுக மாவட்ட துணைச் செயலா் செவல் முத்துசாமி, மாவட்ட இலக்கிய அணிச் செயலா் கூனியூா்மாடசாமி, நகர இளைஞரணிச் செயலா் மாசானம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை வேளாண் அலுவலா் கலைச்செல்வி, துணை வேளாண் அலுவலா் வரதராஜன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் ஈழவேணி, உதவி வேளாண் அலுவலா்கள் சக்தி, காா்த்திகா, ஷேக்முஹம்மது அலி, கணேசன், தமிழ், உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் காா்த்திகேயன், புவனேஷ், விக்னேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT