புளியங்குடி நகராட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்காக, நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் குறித்த கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, நகராட்சி ஆணையா்(பொ) சுரேஷ் தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் ஜெயபால்மூா்த்தி வரவேற்றாா். திடக்கழிவு மேலாண்மை குறித்து சுகாதார ஆய்வாளா் வெங்கட்ராமன் விளக்கமளித்தாா். இயற்கை விவசாயி அந்தோணிசாமி, நகரமைப்பு ஆய்வாளா் காளீஸ்வரி, சேகா், விநோத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.