திருநெல்வேலி

சுரண்டை-சுந்தரபாண்டியபுரம் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

DIN

சுரண்டையில் இருந்து சுந்தரபாண்டியபுரம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சுரண்டை நகரின் மேற்குப் பகுதியில் தொடங்கி சுந்தரபாண்டியபுரம் குளக்கரை வழியாகச் செல்லும் சுந்தரபாண்டியபுரம் சாலை 2 கி.மீ. தூரம் உள்ளது. இதில் சாலை ஆரம்பிக்கும் பகுதியில் இருந்து அனுமன்நதி பாலம் வரை ஒரு கி.மீ. தொலைவுள்ள தாா்ச்சாலை மிகவும் பழுதடைந்து மெட்டல் சாலைபோல காட்சியளிக்கிறது.

இதனால் இந்தச் சாலை வழியாக தென்காசி மற்றும் திருமலைக்கோயிலுக்குச் செல்லும் பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. எனவே, இந்தச் சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT